Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தொழிலாளர் சங்கம் சார்பில் பிரச்சார பரப்பரை

பிப்ரவரி 21, 2023 05:54

எலச்சிபாளையம் : எலச்சிபாளையம், மல்லசமுத்திரம் வட்டாரத்தில், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி பிரச்சார பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.


வருகிற மார்ச் 7ல், நாடு முழுவதும் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் குறைவான ஊதியம், குறைவான நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி மத்திய அரசுக்கெதிராக அந்தந்த பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து பொதுமக்களும் கலந்து கொள்ள வலியுறுத்தி, கடந்த 18, 19 மற்றும் நேற்று ஆகிய மூன்று நாட்கள் தொழிலாளர் சங்கம் சார்பில் பிரச்சார பரப்புரை இயக்கம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

 அதன்படி, எலச்சிபாளையம் மற்றும் மல்லசமுத்திரம் ஒன்றிய பகுதிகளில் அனைத்து ஊர்களுக்கும் இருசக்கர வாகனத்தில் சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி, பிரச்சாரம் மேற்கொண்டனர். மாவட்டச் செயலாளர் ஜெயராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்